தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறது தமிழக அரசியல் கட்சிகள்.
இதனிடையே திமுக – தவெகவுக்குத்தான் போட்டி என விஜய்யின் தவெக கட்சியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தான் தவெக. இவங்களெல்லாம் அதிமுகவை பற்றி பேச என்ன அருகதை இருக்கு. ஆதவ் அர்ஜூனா அதிமுக குறித்து பேச எந்த தகுதியும் இல்லாத நபர்.
முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகமே தெரியாதவர். சிறந்த நிர்வாகத்தை நடத்தி காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவருக்குதான் மக்கள் ஓட்டு போட முடிவெடுத்துவிட்டார்கள்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து இப்போது வரை திமுக – அதிமுக இடையேதான் நேரடி போட்டி. எனவே மற்றவர்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
அரசியல் பண்பாட்டை மீறி இபிஎஸ்சை முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

