சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே யோசிக்காமல் நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன். பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா, நடிகர் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, கொடி போன்ற படங்களில் அம்மாவாக நடித்திருந்தார்.
சரண்யா – பொன்வண்ணன் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இளையமகள் சாந்தினிக்கு சமீபத்தில் நீலகிரியில் திருமணம் நடந்தது. பின்னர் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான நடிகர்கள், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வந்திருந்தனர். அதே போல முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

ஆனால் நடிகர் தனுஷ் பங்கேற்றது தான், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால், மேடைக்கு தனுஷ் வந்தததும், ஆச்சரியமாக பார்த்த சரண்யா, கண்டிப்பாக சாப்பிட்டு போகணும் என கூற, நிச்சயமாக சாப்பிட்டு போகிறேன் என அவர் கூறினார்.

இருவரது உரையாடல்களும், பார்வையாளர்களுக்கு பார்த்தாலே புரிந்துவிடும் வகையில் இருந்தது. இதை பார்த்த பார்வையாளர்களும் புன்னகையுடன் பார்த்தனர்.

