மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.
இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், காவியாவிற்கு அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது.
வீட்டிற்கு இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, கணவர் காவியாவை கண்டித்துள்ளார். ஆனால் யாருக்கும் தெரியாமல், கள்ளக்காதலன் கார்த்திக்குடன் காவியா ஓடிப்போயுள்ளார்.
பின்னர், மீண்டும் அவரை அழைத்து வந்து சமரசம் செய்து செந்தில்குமாருடன் சேர்த்து வைத்தனர். ஆனால் கள்ளக்காதலனுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளாத காவியா, மீண்டும் கார்த்திக்குடன் பழகி வந்துள்ளார்.
யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள நகை, பணம் கொடுத்து உதவியும் செய்து வந்துள்ளார்.
இதை தெரிந்த செந்தில்குமார், காவியாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற காவியாவுக்கு பெற்றோர்களும் அட்வைஸ் செய்ய. கடுப்பான, காவியா போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த போலீசார், காவியாவிற்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்கு இத்தனை இடையூறா என நொந்து போன காவியா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டார்.
அதன்படி கார்த்திக் மற்றும் சிலர், விடிய விடிய மது அருந்திக் கொண்டு, டீக்கடை அருகே காத்திருந்துள்ளனர். அதிகாலை டீக்கடையை திறக்க வந்த செந்தில்குமாரை அரிவாளுடன் வெட்டி சாயத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

