2016 முதல் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பல நடிகர்கள், நடிகைகள், சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் தேர்வாகினர்.
விருது பட்டியலில் தனுஷ், விக்ரம்பிரபு, விஜய் சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களாகவும், ஜோதிகா, நயன்தாரா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜூமோல், சாய் பல்லவி சிறந்த நடிகர்களாக தேர்வாகினர்.
விருது பட்டியல் குறித்து விவாதங்கள் பல எழுந்தன. விருதுக்கு தேர்வான கலைஞர்கள் பலர், தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். ஆனால் தேர்வாக திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், திரையுலகினர் பலர் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.

சமூகத்திற்காக நல்ல கதை சொன்ன படங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், விமர்சன ரீதியாக, கலை ரீதியாக பாராட்டை பெற்ற திரைப்படங்கள், கலைஞர்களுக்கு விருது கிடைக்காதது சரியா என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு.. வாழ்த்துக்கள் என ராட்சசி திரைப்படத்தின் இயக்குநர் கௌதம்ராஜ், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டேக் செய்துள்ளர்.
ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு.. வாழ்த்துக்கள் @CMOTamilnadu @Udhaystalin @Anbil_Mahesh
— Sy.Gowthamraj (@sy_gowthamraj) January 30, 2026
ஒருபுறம் விருதுக்கு தேர்வானவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், தகுதியுள்ள திரைப்படங்கள், கலைஞர்கள் தேர்வாகாதது குறித்து எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

