நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து அமைச்சர் கேஎன் நேரு சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, ஒரு போதும் அழுத்தத்திற்கு பயப்பட மாட்டேன் என கூறிய விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார்.
தன்னுடைய படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது நடிகர் விஜய் அவருடைய தந்தையை அழைத்து கொண்டு ஜெயலலிதாவிடம் கைக்கட்டி நின்றனர். இப்போது வீரவசனம் பேசுகின்றனர் என கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..!
எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்?

ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா?
தவெக வை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் 2000கோடிக்கு மேல் நடந்த முறைகேடுக்கு ED விடுத்த நோட்டிசுக்கு எங்கெல்லாம் ஓடி ஒழிந்தார்?
கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா? முதலில் உங்கள் கிழிசலை தைத்துக்கொள்ளுங்கள்..! என பதிவிட்டுள்ளார்.

