டாடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கணேஷ் கே பாபு. டாடா படம் மூலம் நல்ல திறமையான இயக்குநராக வலம் வருகிறார்.
இவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் கராத்தே பாபு. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் சம்மந்தப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ரவி மோகன்.
இவருடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், தவுதி எஸ் ஜிவால், காளி வெங்கட் உட்பட பலர் நடிக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கடந்த வருடம் பிரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம் கராத்தே பாபு என்பது ஆளுங்கட்சி அமைச்சரான சேகர் பாபுவின் கதை என ஒரு பக்கம் பேச்சுகள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் படக்குழு மறுத்தது.
இன்று டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தொழிலுக்காக அரசியல் பண்ற. நான் அரசியலையே தொழிலா பண்றேன் என ரவி மோகன் பேசிய பஞ்ச் அனல் பறக்க விட்டுள்ளது.

