திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஏசுதாஸ்(45).
இவர் மீது 2024 ஆம் ஆண்டு மாயாண்டி ஜோசப் என்பவரை கொலை செய்த வழக்கை முதல் குற்றாவவாளியாக தொடர்புடைய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏசுதாஸ் பிணையில் வெளியே வந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் காரில் நத்தம் சாலையில் RMTC நகர் அருகே ஏசுதாஸ் வெட்டிவிட்டு தப்பித்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரண மேற்கொண்டு இருந்தபோது ஏசுதாஸ் இரண்டாவது மனைவியான தீபிகா என்பவரை வீட்டின் முன்வைத்து கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.

உடனடியாக போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒரே நேரத்தில் கணவன் மனைவியை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இரண்டு கொலைகளை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

