சின்னத்திரையில் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
மெரினா படம் மூலம் அறிமுகமாக மதராஸி வரை பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் நாளை வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
பராசக்தி படத்திற்கான பிரமோஷன் பட்டையை கிளப்பி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகவும், குடும்பத்தோடு செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித், மாதவன் போன்ற நடிகர்கள் துபாயில் வீடு வாங்கியுள்ள நிலையில், அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

