அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் ஜனநாயகன் படம் தான் கடைசி என அறிவித்திருந்தார். படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில், சாதகமான தீர்ப்பு வராததால் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்தது.
இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் விஜய்யின் அரசியல் நுழைவே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட உள்ளதால் தான், இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக பரவலான கருத்துக்கள் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெர்சல் பட ரிலீசின் போதே பிரச்சனை ஏற்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம், அது போலவே தற்போது ஜனநாயகனுக்கும் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.

மெர்சல் ரிலீசின் போது, பிரதமர் மோடியை எச்சரித்து ராகுல் காந்தி போட்ட எக்ஸ் தள பதிவை சுட்டிக்காட்டி, காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தற்போது, ஜனநாயகனை வேண்டுமேன்றே திட்டமிட்டு பிரதமர் மோடி தடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

