பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து வஞ்சித்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலகட்டத்தில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதே என அவர் தெரிவித்ததுடன், அதனை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தன் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜாய் கிரிசில்டா அவதூறு பரப்புவதற்கு தடை விதிக்கக் கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனுவை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

