திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள முத்தையன் கோயில் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ குப்பைகளை அகற்றும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து அந்த பகுதி பொதுமக்களுடன் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளை குப்பையின் மேலே ஏறி நின்று பார்க்கச் சொன்னார் .தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் குப்பைகளை இயந்திரம் கொண்டு அள்ளி வருகிறார்கள்.
தொடர்ந்து பேசிய எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ந்து கூறிவந்தேன். இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குப்பைகள் அள்ளபடவில்லை வழியாக செல்லும் பொழுது பொதுமக்கள் தன்னை தடுத்து கேட்பதாகவும் ,இதன் காரணமாகவே உடனடியாக குப்பைகளை அல்ல வேண்டும் என தன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவில்லை குப்பைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உட்கார மட்டுமே செய்துள்ளேன்.

நான் இயக்கமாக பார்க்கவில்லை எம்எல்ஏவாகவே பார்க்கிறேன். இது போராட்டம் அல்ல, பிரச்சனை இன்று தீரும், நாளை தீரும் என்று காத்திருந்தேன் இது தீரவில்லை போராடிய மக்கள் என்னை அணுகியிருந்தால் தீர்வு கொடுத்திருப்பேன்.

தேர்தல் சமயத்தில் நடத்தப்படும் நாடகமா என்ற கேள்விக்கு: இது தேர்தல் அரசியல் அல்ல மக்களுக்காக போராடுகிறேன் என்றார். சட்டமன்ற உறுப்பினர் என்றால் வீட்டில் படுத்து உறங்க முடியாது இது மக்களுக்கான பிரச்சனை என கூறினார்.

