நடிகர் விஜய் தீவிர அரசியல்வாதியாக மாறியுள்ளார். அரசியலில் முழுநேரமும் குதித்துள்ளதால் தனது சினிமா கேரியரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள அவர் தனது ஜனநாயகன் படம்தான் கடைசி என அறிவித்துள்ளார்.
தவெக கட்சியை தொடங்கிய விஜய், பல்வேறு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். 2026 தேர்தல் தான் இலக்கு என களப்பணியாற்றி, தேர்தல் மாநாடு நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் சில நேரங்களுக்கு முன் வெளியானது.
இந்த நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் பரிந்துரைத்தும், இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை.
ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை.
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) January 3, 2026
தடுப்பது யாரோ?
தடைகள் பல வரலாம்,
தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம் 🙏 pic.twitter.com/ia197cLB0E
தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம் என பதிவிட்டுள்ளார்.

