திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்டவிரோத கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு கோம்பைப்பட்டி சாலையில் போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே புதிய இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் போலீசாரை கண்டதும் அதிவேகமாக தப்பி சென்றனர்
அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது அதில் கால் கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து சில்லரை விற்பனையில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது

இதனைத் தொடர்ந்து கோம்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (19) ஹரிஷ் (20) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய புதிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கேட்பதற்கு யாரும் இல்லாத புள்ளிங்கோ ஸ்டைலில் செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் காவல் நிலையத்தில் செய்த தவறுக்காக கதறி அழுதனர்.
பின்னர் இருவரும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

