கோவையில் 9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை பெத்தி குட்டையில் ரூபாய் 19.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவண காப்பகம், சேமிப்பகம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து தற்பொழுது ஆர்.எஸ் புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ரூபாய் 9.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உள்ளார்.

இங்கு ரூபாய் 31.3/4 கோடியில் 12 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, மேலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 9.5 கோடியில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு உள்ள செயற்கை புல்வெளி தளத்துடன் ஹாக்கி மைதானம், சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள், குப்பைகள் சேகரிப்பு மையம் உட்பட ரூபாய் 162.5 கோடியில் 107 முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விழாவில் 10 ஆயிரத்து 626 பயனாளிகளுக்கு ரூபாய் 136.5 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

