வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்கள் இந்த காலத்தில் சின்னத்திரையை தான் நம்பி வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரையில் பிரபலமானால் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது இந்த காலத்தில் சுலபமானது தான்.
அப்படித்தான் நமக்கும் கிடைக்கும் என ஏராளமான நடிகர்கள், நடிகைகள் சின்னத்திரை மூலம் பிரபலமாக முயற்சி செய்கின்றனர். அப்படி வந்தவர் தான் சீரியல் நடிகை நந்தினி.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் நந்தினி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கன்னட சீரியலிலும் நடித்து வந்தார்.
தமிழில் கௌரி சீரியல் வாய்ப்பு கிடைத்ததும் மிக மகிழ்ச்சியடைந்த அவர், சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். கனகா, துர்கா என இரு வேடங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.
பெங்களூருவில் கௌரி சீரியல் படப்பிடிப்பு நடந்தது வந்தது. பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் சென்னைக்கு வந்து நடித்து கொடுத்த நந்தினி, சின்ன பிரேக் எடுத்துக்கொள்வதாக பெங்களூருவுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் தனியறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில், குடும்பத்தினர் திருமணத்திற்கு வற்புறுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்ள தற்போது இஷ்டமில்லாத நிலையில், மன உளைச்சலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சீரியல் உலகம் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

