
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் கடந்த 53 நாட்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் இலங்கை நீதிமன்றம் இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்துள்ளது
ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் மீன்பிடிக்கச் சென்றபோது கடல் எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்

இந்த கைது சம்பவம் தொடர்பாக மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனையில் இருந்தனர் மேலும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு மீனவர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன
இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக இலங்கை நீதிமன்றம் 4 மீனவர்களையும் 53 நாள்களுக்குப் பிறகு விடுதலை செய்துள்ளது விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில், மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது
தமிழக மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
