திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் பள்ளி முடிந்து தனியாக வீடு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து, வாயை பொத்தி மாந்தோப்பில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர் தப்பியிருந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை போலீசார் வெகுநாட்களாக தேடிவந்தனர். 9 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் குற்றம் நடந்து 13 நாட்களுக்கு பின்னர் சூலூர் பேட்டை ரயில்நிலையத்தில் வைத்து அசாம் மாநிலத்தை சேர்நத் பிஸ்வகர்மா என்பவனை போலீசார் கைது செய்தனர்,
இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 1, பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இதுவரை 22முறை குற்றவாளி ஆஜராகியிருந்தார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 1.45 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சாகும்வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடந்த 5 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை சமூக ஆர்வலர்கள் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

