விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “குமரன் என்பதை சுப்பிரமணியன் என மாற்றியுள்ளனர். எந்த பார்ப்பனராவது ‘முருகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களா? அவர்கள் முருகனை ‘ஸ்கந்தன்’ என்றே அழைக்கின்றனர். ‘கந்தன்’ என்றாலும் அது தமிழ் பெயராகிவிடும் என்பதால் ‘ஸ்கந்தன்’ என்றுதான் பயன்படுத்துகின்றனர். முருகன் என்ற பெயரை வைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

திருமாவளவனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிராமண சமூகத்தைச் சேர்ந்த தனது கணவர் பெயர் ‘குமார்’ என்றும், தனது மகன் பெயர் ‘கார்த்திகேயன்’ என்றும் குறிப்பிட்டு, அவை அனைத்தும் முருகன் பெயர்களே என பதிலடி கொடுத்துள்ளார்.

