இயக்குநராக கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி பட வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப், நாயகனாகவும் நடித்தார். இளம் தலைமுறையை கவர்ந்த அந்த படம் ரூ.100 கோடி வசூலை குவித்தது. இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடிக்க, அந்த படமும் ரூ.100 கோடி வசூலை குவித்தது.
அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கிய அவர், கீர்த்தீஸ்வரன் இயக்கிய ட்யூட் படத்தில் அசத்தியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் GEN Z தலைமுறையினரை அந்த படம் ஈர்த்தது. ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து பிரதீப் ரங்கநாதனை அடுத்த லெவலுக்கு ஏற்றி விட்டது.
தற்போது அவர் கைவசம் lik படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆகியுள்ளார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பிரதீப் ரங்கநாதன் டபுள் ரோலில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே லவ் டுடே, டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. புதிய படத்தையும் அந்த நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும், முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டெர்டெயின்மென்ட் ஆக உருவாக உள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

