தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்றும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை திணிப்பாக பார்க்காமல், மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பிரபல யூடியூபர் மாரிதாஸ் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் திமுக செய்த துரோகம் , கீழ்தரமான அரசியலை உச்ச நீதிமன்றம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
ஆனா எந்த தமிழக செய்தி ஊடகம் பரபரப்பு செய்தி போட்டானா? விவாதம் செய்தானா? இத்தனை ஆண்டுகளில் கிராமத்து பகுதியில் உள்ள சுமார் 5 லட்சம் மாணவர்கள் இலவசமாக உயர் தரத்தோடு CBSE பள்ளியில் படித்து வெளியே வந்திருக்க முடியும். அத்தனையும் கெடுத்தது திமுக கருணாநிதி. அதை கெடுக்க ஒரே காரணம் திமுக கட்சி காரர்கள் ஆரம்பித்த CBSE பள்ளிகளில் நல்லா சம்பாரிக்க.
நவோத்யா பள்ளி கூடாது என இதை மொழி பிரச்சனையாக்கி தடுத்துவிட்டு , இவனுக அதே கல்விக்கு 5 லட்சம் டொனேஷன் வாங்கி சொல்லி கொடுத்தானுக. கருணா நிதி காலத்தில் தான் cbse பள்ளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. தீய சக்தி என ஒன்று உண்டு என்றால் அது கருணாநிதி கும்பல் தான்.

