உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு 2 மகன்களை பெற்ற தாய் செய்த சம்பவம் பெங்களூருவை அதிர வைத்துள்ளது.
பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியை சேர்ந்த மோனிகா (வயது 35) தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மோனிகா, 2வது திருமணம் செய்து கொண்டார். தனது இருமகன்களுடன் 2வது கணவருடன் மோனிகா வசித்து வந்தார்.
இதனிடையே இன்ஸ்டாகிராமில் மூழ்கிய அவர், ரீல்ஸ் போட ஆரம்பித்தார். மோனிகா ரீல்ஸ்களை பார்த்த போலீஸ்காரர் ராகவேந்திரா மயங்கினார். ஒரு கட்டத்தில் மோனிகாவுடன் பேச வேண்டும் என செல்போன் நம்பரை கேட்டார்.
மோனிகாவும் நம்பரை ஷேர் செய்ய இருவரும் மணிக்கணிக்கில் பேச ஆரம்பித்தனர். பின்னர் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இது பத்தாது என்று, தான் வசிக்கும் வீட்டிற்கே போலீஸ்காரரை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் மோனிகா.
இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட, இவர்களது ரீல்ஸ் வைரலானது. போலீஸ்காரரான ராகவேந்திராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
இதனிடையே இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். வீட்டில் இருந்த 160 கிராம் தங்க நகையை எடுத்துக் கொண்டு போலீஸ்காரருடன் மோனிகா மாயமானார். இதை அறிந்த 2வது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஒரு காவலரின் கேவலமான செயலை கண்டு அதிர்ந்து போலீசார், அவரை பணியிடை நீக்கம் செய்தனர். தற்போது வரை ராகவேந்திரா, மோனிகா எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இருவரது விபரீத செயலால், இரு குடும்பங்களும் நிற்கதியாய் அவமானத்தில் கூனி குறுகி உள்ளனர்.

