பிரபல நடிகையிடம் ரூ.3 லட்சம் கேட்டு ஆன்லைனில் மிரட்டல் வந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பெரும் கவனம் பெற்றவர். நடிகை, இயக்குனர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்ட அவர், சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தனது X (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீண்டும் பெற 3500 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சம் ரூபாயை கடந்ததாகும்.
Shocked to be told I must pay $3,500 to retrieve my suspended Instagram account — with no clarity on the post which is the reason for the suspension. May be it is done by mistake? Quite possible as I use Insta only for sharing details about my own activities. Even more… pic.twitter.com/dR3E9lBhn2
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) December 13, 2025
இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள், இது மோசடி முயற்சி எனக் கூறி, பணம் செலுத்த வேண்டாம் என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

