தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதே போல அதிமுக, பாஜகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை எதிர்கொள்கிறது.
சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!
திமுக, அதிமுக தவிர நாதக, தவெக என நான்குமுனைப் போட்டி நடைபெறுவதால் இந்த தேர்தல் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் நாம் தமிழர் கட்சி கோதாவில் பின்வாங்கும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறிவிட்டன. ஆனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் போட்டியிலே கணிசமான தொகுதிகளையும், வாக்கு சதவீதத்தை பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி களம் ‘கை’மாறியுள்ளதாகவும், தவெக பக்கம் ‘கை’ ஓங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதி எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தரும் என்பது கண்கூடான விஷயம்.
சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!
கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி தேடி வரும். ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டு விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ ஆன விஜயதாரணி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜக பக்கம் தாவினார்.

விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக விஜய தாரணி, சில காரணங்களால் கட்சியை விட்டு விலகியது காங்கிரஸ்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம், பாஜக சென்ற அவருக்கு கடந்த 2 வருடமாக எந்த பதவியோ பொறுப்போ வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் வரும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது பாஜக. அதே போல தவெக சார்பாக அட்வகேட் மைக்கேல் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் தவெகவின் வேட்பாளர் தேர்வு இதில் மிகச்சரியே என தொகுதி மக்களே கூறுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ வேட்பாளர் தேர்வில் மகப்பெரிய தவறு செய்துவிட்டது. காரணம், கேரளளாவை சேர்ந்த T.T பிரவீன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக சொந்த கட்சியினரே பணி செய்ய மறுத்து வருகின்றனர். நீண்ட காலமாக பணியாற்றிய உள்ளூர் நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக நிர்வாகிகள் அதிருப்தியை தெரிவித்தது மட்டுமல்லாமல், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் விளவங்கோடு தொகுதியில் போட்டி தவெக – பாஜக இடையே தான் என களம் மாறியுள்ளது. இந்த சூழலில், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த முறை தங்களது வாக்கினை தவெகவுக்கு போட முடிவெடுத்துள்ளனர்.

அதே சமயம், விளவங்கோடு பகுதி கிறிஸ்துவ மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுத என்பதால், பாஜகவினருக்கு வாக்கு போகாது. இதனால் விளவங்கோடு தொகுதியில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக மற்றும் காங்., கட்சிகளை சேர்ந்த பலரின் வாக்கு கூட விஜய்யின் தவெக பக்கம் சாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் கடைசி வரை போராடி 28 தொகுதிகள் வாங்கிய காங்கிரஸ் கட்சிக்கு இது பேரிடியாக உள்ளது.

