கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திறந்தவெளியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது, வாகனங்களில் இருந்து வெளியேறும் ஆயில், மற்றும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் மீது தீ பற்றியதால் தீ மல மல என பரவி ஏராளமான பழைய வாகனங்கள் கருகி சேதம் அடைந்தன.
ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!
சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறையினர் தீ மேலும் பரவாமல் கண்ணீரை அடித்து கட்டுப்படுத்தினர் இப்பகுதியில் இதே போன்ற விபத்து ஓராண்டுக்குள் மூன்று முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாபாரிகள் தங்களது வாகனங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைப்பது, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அதே பகுதியில் போட்டு வைத்து இருப்பதாலும் தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

