கோவை, தொண்டாமுத்தூரில் த.வெ.க பொதுக் கூட்டத்தில் கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது;
நாம் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறோம் வெற்றி பெறும் தொகுதிகளின் வரிசையில் தொண்டாமுத்தூர் இருக்கிறது. வேலுமணியை கைது செய்யாமல், விட்டு வைக்க எத்தனை கோடி பெற்றீர்கள் ? ஸ்டாலின் அவர்களே, முன்னாள் அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் வழக்கு போடப்படும் என்றீர்கள் ? ஆனால் ஒருத்தரை கூட கைது செய்யவில்லை வழக்கும் போடவில்லை, வேலுமணி குடித்து அதே ஊழல் பாலை தான் இப்பொழுது ஸ்டாலின் குடிக்கிறார்.
தமிழகத்தில் த.வெ.க வுக்கும், தி.மு.க வுக்கும் தான் போட்டி என விஜய் கூறியிருந்தார். ஆனால் தொண்டாமுத்தூரில் த.வெ.க வுக்கும், அ.தி.மு.க வுக்கும் தான் போட்டி… தி.மு.க விற்கும், அ.தி.மு.க விற்கும் உறவு உள்ளது. என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.

