அதிமதுரம் என்பது ஒரு மிகச்சிறந்த மருத்துவ மூலிகை. இது இனிப்பு சுவை கொண்டதாக இருந்தாலும், ஆரோக்கியம் மற்றும் அழகு என இரண்டிற்கும் பெரிதும் உதவுகிறது. அதிமதுரத்தின் முக்கிய பயன்கள் சரும பொலிவிற்கு உதவுகிறது. அதிமதுரத்தை பாலுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க உதவுகிறது. சுவாச பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இருமல் மற்றும் சளி குணமடையும் தொண்டைப்புண் மற்றும் வறட்டு இருமலுக்கு சிறந்த மருந்தாக அதிமதுரம் செயல்படுகிறது.

காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!
ஒரு துண்டு அதிமதுரத்தை வாயில் போட்டு அந்த சாற்றை மெதுவாக விளங்கினால் தொண்டை கரகரப்பு நீங்கும். செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். வயிற்றில் ஏற்படும் அல்சர் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளுக்கு அதிமதுரம் உதவுகிறது. இது வயிற்றில் உட்புற சுவரில் ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி உங்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. கூந்தல் பராமரிப்புக்கு நெல்லிக்காய் பொடியுடன் அதிமதுர பொடியை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது மற்றும் இளநரை குறையும்.

வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!
சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க அதிமதுரம் ஃபேஸ் பேக் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனை எப்படி உங்கள் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிமதுரம் ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்
- இரண்டு டீஸ்பூன் அதிமதுரம் பொடி
- ஒரு தக்காளி
- இரண்டு டீஸ்பூன் பால்
- 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
- ஒரு டீஸ்பூன் தேன்
- அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 டீஸ்பூன் கடலை மாவு

ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் அதிமதுர தூளை எடுத்து அத்துடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதில் பால், ரோஸ் வாட்டர், தக்காளி சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும். பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். ஃபேஸ்புக் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே காய வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளப்பாகும்.
இந்த அதிமதுரம் ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் நீக்கி, சருமத்தை பளபளப்பாக வைத்து, தேனில் உள்ள பாக்ட்டீரிய எதிர்ப்பு பண்புகள், எலுமிச்சை சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

மேலும், வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. அதிமதுரம் சருமத்திற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தரும்.
அதிமதுர ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் பருக்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைக்கிறது.
மேலும், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் எலுமிச்சை சாற்றில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கத்துக் கொள்ள அதிமதுரத்தை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை
அதிமதுரத்தை நீண்ட காலம் தொடர்ந்து உட்கொள்ளக் கூடாது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இதனை உட்புறமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

