பூரி பிரியரா நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்கிறீர்களா ஒரே மாதிரியான கோதுமை மாவில் பூரி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா கவலையை விடுங்க. ஒரு முறை ராகி மாவில் பூரி செஞ்சு பாருங்க. இது மிகவும் சுவையாக இருப்பதோடு சத்தானதும் கூட. கோடை காலத்தில் ராகியை உணவில் தினசரி சேர்த்து வருவது உடலுக்கு நல்லது.
தொப்பையை குறைக்கணுமா?.. எனர்ஜி தரும் பச்சைப்பயறு கஞ்சி ரெசிபி..!
ராகி கூழ், ராகி ரொட்டி, ராகி இட்லி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், ராகி பூரியை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள். திரும்பத் திரும்ப கேட்பார்கள். அதுவும் வெங்காய மசாலா இதனுடன் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கும். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பூரிக்கு
- ஒரு கப் ராகி மாவு
- ஒரு கப் கோதுமை மாவு
- சுவைக்கு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
மசாலாவிற்கு
- இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- அரை டீஸ்பூன் கடுகு
- ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- முக்கால் டீஸ்பூன் சோம்பு
- 3 நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்
- ஒரு கொத்து கருவேப்பிலை
- நான்கு பச்சை மிளகாய்
- சுவைக்கேற்ப உப்பு
- கால் டீஸ்பூன் மஞ்சத்தூள்
- பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி
- அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- அரை டீஸ்பூன் கரம்சாலா
- 2 டம்ளர் தண்ணீர்
- 2 டீஸ்பூன் கடலை மாவு
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
Step 1: முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ராகி மாவு மற்றும் ஒரு கப் கோதுமை மாவை எடுத்து அதில் உப்பு சேர்த்து கிளறி கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி மூடி வைத்து பத்து நிமிடங்கள் அதனை அப்படியே வைத்து விட வேண்டும்.
Step 2: அதற்குள் மசாலா செய்துவிடலாம். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
Step 3: பின்னர் அதில் சோம்பை சேர்த்து தாளித்து, நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகவும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
Step 4: பின்னர் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி இரண்டு டம்ளர் நீரை உற்றி கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனுடன் கடலை மாவு நீரை கட்டிகள் இன்றி கரைத்து அதில் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். மசாலாவானது கெட்டியாகவும் அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வெங்காயம் மசாலா தயார்.
Step 5: இறுதியாக பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிககளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை சேர்த்து முண்ணும் பின்னுமாக வேகவைத்து எடுத்தால் ராகி பூரி ரெடி.

