தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரைகள் செய்வதில் பிஸியாக இருக்கிறார்கள். இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் செங்கோட்டையன் பேசியது பொதுவெளியில் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டை சில மாதங்களுக்கு முன்பு விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்த நிலையில், அக்காட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருச்செங்கோடு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டை ஆதரவு சேகரிக்க சென்றிருந்தார். அப்போது விசில் ஊதினால் சளி பிரச்சனை சரியாகும் என தெரிவித்தார்.

பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!
சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊத சொல்லிக் கொடுங்கள். சளி பிரச்சனை சரியாகிடும். வயது முதிர்ந்தவர்கள் ஊதினால் இதயம் நன்றாக வேலை செய்யும். ஆரோக்கியமான மூச்சு பயிற்சி இதுதான் இதயம் நன்றாக இயங்கும் என அதில் தெரிவித்திருந்தார். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால், தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது என அதில் பேசியுள்ளார்.

