கோவை பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் அண்ணாமலையுடன் எஸ் பி வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்பி வேலுமணி ஈச்சனாரி விநாயகர் கோயில், சுகுணாபுரம் மாரியம்மன் கோவில் அதைத் தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பேரணியாக சென்று பேரூர் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குறிப்பாக பேரூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த எஸ் பி வேலுமணிக்கு அதிமுக பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த பேரணியில் கலந்து கொண்டதோடு, எஸ் பி வேலுமணியோடிய இணைந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வட இந்திய வாக்காளர்களைக் கவர திட்டம்?.. ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரம்..!
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வேலுமணி, இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் மிகப்பெரிய வளர்ச்சியையும், எல்லா வளர்ச்சியையும் நாங்கள்தான் கொடுத்திருக்கிறோம் எனவும் கல்லூரி, தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம், சாலை விரிவாக்கம் , பாலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்திருக்கிறோம், ஆகவே மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்வார்கள் எனவும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்த பிறகு அதிமுக தற்போது பாஜக கூட்டணியுடன் உள்ளதாலும், மத்தியில் மோடி பிரதமராக உள்ளதாலும், மத்தியிலும் மாநிலத்திலும் இணைந்து அதிகமான, தொகுதிக்கும் கோவைக்கும் மிகப்பெரிய வளர்ச்சியை, திமுக செய்யாத திட்டங்களை, விடுபட்ட திட்டங்களை, இன்னும் அதிகமான அதிகமான திட்டங்களை செய்வோம் என தெரிவித்தார்.
மேலும் தொண்டாமுத்தூரில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற அனைவரும் கூறுகிறார்கள் என தெரிவித்த எஸ் பி வேலுமணி, கோவை தெற்கு தொகுதி உட்பட கோவையில் இறக்குமதி வேட்பாளர்கள் இறக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கடந்த முறை கோவை மாவட்டத்தில் பத்துக்கு பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றோம், இந்த முறை அவிநாசியும் சேர்த்து 11 தொகுதிகளிலும் முழுமையாக எங்களது கூட்டணி வெற்றி பெறும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார்.
கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கோவையின் வளர்ச்சி நாயகனாக, கோவையின் காவலனாக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான எஸ்பி வேலுமணி வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், தொண்டாமுத்தூரில் அவர் செய்த நல்ல பணிகளில் பயன்பற்றவர்கள் அவர்களாகவே இன்று திரண்டு வந்திருக்கிறார்கள் எனவும் எஸ் பி வேலுமணி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வர வேண்டும்,மறுபடியும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எஸ்பி வேலுமணி உயர்ந்த பொறுப்பில் வந்த பிறகு கோவையின் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் எனவும் வளர்ச்சி நிறைய தடைப்பட்டு இருப்பதாகவும், அதனால்தான் எஸ் பி வேலுமணியுடன் நின்று கொண்டிருப்பதாகவும், கோவையின் வளர்ச்சியை எஸ் பி வேலுமணி தான் உறுதி செய்ய முடியும் என தெரிவித்தார்.
பெரிய வெற்றி தொண்டாமுத்தூரில் உறுதி என தெரிவித்த அண்ணாமலை, எஸ் பி வேலுமணி கூறியது போல 11 க்கு 11 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் எடப்பாடி பழனிச்சாமி, எஸ் பி வேலுமணி உயர்ந்த பதவியில் அமர்ந்த பிறகு மத்திய அரசிடம் இருந்து திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தியே தீருவோம், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை, பாஜக அதிகாரப்பூர்வமாக சொல்கிறோம் எனவும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் தொடர்பாக பேசி உள்ளதாகவும் தெரிவித்தார்.
9-ம் தேதி முதல் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக கூறிய அண்ணாமலை, இந்த முறை தான் வேட்பாளராக இல்லாத காரணத்தால் சிறிது நேரம் இருக்கிறது, தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்வோம் எனவும், தங்கள் கட்சி தற்போது என்னிடம் பிரச்சாரம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளது, கட்சி நாளை வேட்பாளராக நிற்க வேண்டும் எனக் கூறினால் வேறு ஒரு தேர்தலில் வேட்பாளராக நிற்பேன் எனவும் தொண்டாமுத்தூரில் எஸ் பி வேலுமணி பிரச்சாரம் செய்வார், நான் மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார்.

