அதிகப்பிரசங்கி போல செயல்பட்ட பாஜக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு முக்கிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக இருந்த முரளீதரன், கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியதாகவும், கட்சியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவர் தனது பதவியிலிருந்து மட்டுமின்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!
இந்த நடவடிக்கை, கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முரளீதரனுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், தேர்தல் முன்னோட்டத்தில் கட்சிக்குள் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

