கோவை ஸ்ரீ ரங்கநாதர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரியில் ஜே இ இ தேர்வு நேற்று நடைபெற்றது.
பல்வேறு ஊர்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மையத்திற்கு தேர்வு எழுத வந்தனர். அப்போது கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவில் அதிகளவு சத்தத்தில் பாட்டு போட்டதால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!
இதனையடுத்து, பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும், சத்தத்தை குறைக்காததால்,100 க்கு கால் செய்து புகாரளித்துள்ளனர். பெற்றோர்களின் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி பாட்டு சத்தத்தை குறைத்துள்ளனர்.
நாம் வீசும் பிளாஸ்டிக், ஒரு உயிரின் முடிவு.. பிளாஸ்டிக் பைகளை உணவாக நினைத்து கொத்தும் பறவைகள்..!
இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள், தேர்வு எழுதும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மையத்தில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வருவதால், தேர்வு மையத்தை மாற்றக்கோரி பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

