யூடியூபர் மோனாலிசாவை பார்க்கப் போகிறோம் என்று கோவையில் இருந்து சென்னைக்கு செல்ல முயன்ற நான்கு பள்ளிக்கூட மாணவிகளை ரயில் நிலையத்தில் போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த காலத்தில் சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் போன்ற பள்ளி கல்லூரி மாணவர்களின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளன. மாணவர்கள் youtuber மற்றும் instagram பிரபலங்களை அதிகமாக பின் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக கருதும் நிலை உருவாகி உள்ளது.
விழிப்புணர்வா? விதிமீறலா?.. உயிருக்கு ஆபத்தான முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!
இந்நிலையில் பள்ளிக்கூடம் மாணவிகள் பெண் youtube பிரபலம் ஒருவரை சந்திப்பதற்காக ரயிலில் சென்னை செல்ல முயன்ற சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் நெருங்கிய தோழிகள், அவர்கள் பெற்றோரிடம் கூறி செல்போன் வாங்கி இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி, பலரை நண்பர்களாக சேர்த்தனர்.
இதில் ஒருவருக்கு சென்னையைச் சேர்ந்த youtube பிரபலம் மோனலிசா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் பதிவேற்றும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்த அந்த, மாணவி இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து அடிக்கடி பேசியும் வந்தார். பின்னர், இதை தனது தோழிகளிடம் கூறியதால், மற்ற மூன்று பேரும் மோனலிசாவை பின் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தனர்.
இதனால், அந்த நான்கு மாணவிகளுக்கும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்காக அவர்கள் சென்னை செல்ல முடிவு செய்தனர். வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
தமிழ்ப்படம் 2 ரேஞ்சுக்கு கெட்டப் போட வேண்டியிருக்கு.. மகளுக்காக சதிஷ் செய்த கலாட்டா..!
காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வெட்டை நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் கோவை ரயில் நிலையத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார் 4 பேரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும் போது; மாணவிகள் 4 பேரும் youtube மோனலிசாவை பார்க்க சென்னை செல்வதற்கு அவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் வாருங்கள் என்று கூறியதாக தெரிவித்தனர்.
இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!
எனவே அது உண்மையா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான மோனலிசாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம், இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட உள்ளது. விசாரணை முடிவில் அவர் அந்த மாணவிகளை வரச் சொன்னாரா? என்பது தெரிய வந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

