மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஒரு பிரபலமான நடிகையாகவே அறியப்படுகிறார்.
துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள நகை நகைக்கடை திறப்பு விழாவில் ஹனி ரோஸ் கலந்து கொண்டார். அங்கு இவரை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அந்த கூட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டார். அவருடன் செல்பி எடுக்க முயன்ற சிலர் அந்த சமயத்தில், அநாகரிகமாக நடிகையின் இடுப்பில் கை வைத்துள்ளனர்.

அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு நகைக்கடை உரிமையாளர் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் வருங்கால நிகழ்வுகளில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால்? விஜய்க்கு விக்ரமன் கொடுத்த நெத்தியடி பதில்..! (வீடியோ)

கடும் கூட்ட நெரிசல் காரணமாக ஹனி ரோஸ் அந்த விழாவில், இருந்து பாதியிலே வெளியேறினார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளிடம் ரசிகர்கள் இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகவே ஆகி விட்டது. அண்மையில், நிதி அகர்வால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரசிகர்கள் அவரிடம் எல்லை மீறி நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ఒక వ్యాపార సంస్థ కార్యక్రమానికి హాజరైన.. కేరళ నటి హాని రోజ్ కు చేదు అనుభవం.#HoneyRose #Kerala #CelebrityNews #BreakingNews #Viral pic.twitter.com/Kb6oioRhSK
— Janavaani (@Jana_vaani) March 30, 2026

