விஜய்யை பற்றி விமர்சனம் வைக்கவே மாட்டேன் என இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் கூறியுள்ளது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்தி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்.சி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் நோக்கம் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, மதுரை மத்திய தொகுதி மக்களிடம் எனக்கு நம்பிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற உறுதி உள்ளது. இதுவரை நான் திரைத்துறையில் கவனம் செலுத்தி இருந்தாலும், இனிமேல் என் வாழ்க்கையில் மாதத்திற்கு குறைந்தது 15 நாட்கள் மதுரையிலேயே தங்கி மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவேன்,” என்று தெரிவித்தார்.
விஜய் கூட்டத்தில் பாட்டில்கள் வீச்சு… திமுக குண்டர்கள்தான் காரணம்.. ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!
மேலும், கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றதாகவும், தற்போது அரசியலை தனது அடுத்த கட்ட பயணமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். 2026 தேர்தல் முடிவுகள் என் அரசியல் எதிர்கால பாதையை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் விஜயுடன் உள்ள உறவைப் பற்றியும் சுந்தர்.சி திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் எனக்கு விஜய் மீதும், விஜய்க்கு என் மீதும் பரஸ்பர மரியாதையும் அன்பும் உள்ளது. என் மனைவியும் அவரை தம்பி போலவே நினைக்கிறார். அதனால், அவரையோ, அவரது கட்சியையோ, வேட்பாளர்களையோ விமர்சிக்க விருப்பமில்லை,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, மதுரை மத்தி தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாகவும், “இந்தத் தொகுதியில் உண்மையான போட்டி இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும்தான் நடைபெறுகிறது,” என்று சுந்தர்.சி தனது அரசியல் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தினார்.

