Flaxseed என்று அழைக்கப்படும் ஆளி விதை நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை அடங்கியது. பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக்கூடிய விதைகள் மிகவும் கடினமானதாகவும் மேற்பகுதி மொறுமொறுவெனவும் இருக்கும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, கனிம சத்துக்கலான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்றவை இதனுள் இருக்கக்கூடிய சத்துக்கள்.

ஆளி விதையின் நன்மைகள்
பொதுவாக ஆளி விதையை பொடி ஆக்கி சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கும் பொழுது அது குழம்பாக்கிவிடும். அதை வடிகட்டி கண்ணில் விட்டால் கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிவிடும்.
வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!
பொது ஆளி விதையில் நார்ச்சத்து மிக அதிகம் இதை சரியான அளவில் உட்கொள்ளும் பொழுது அதிகம் பசி எடுக்காது. இதனால், துரித உணவுகள் அடிக்கடி உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து கெட்ட கொழுப்பு சேருவதை தடுப்பதால் பல நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

மிக முக்கியமாக இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் தேவையற்ற கொழுப்பை எரிக்க துணை புரிகிறது. அசைவ உணவு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு ஆளி விதை சிறந்து புரோட்டீனின் மூலமாகவும், ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வது போன்றவற்றிற்கு ஆளி விதை சிறந்த மருந்தாகும்.
தாம்பத்திய உறவில் சிக்கலா?.. பாலில் இதை கலந்து குடித்தால் கிடைக்கும் அதிரடி மாற்றங்கள்..!
இதிலுள்ள ஒமேகா-3 புற்று நோய்க்கு எதிராக செயல்படுவதால் மார்பக புற்றுநோய் குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. எப்படி சாப்பிட வேண்டும் ஆளி விதைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் இல்லை என்றால் அதன் பலன் முழுமையாக உடலுக்கு கிடைக்காமல் போய்விடும்.

எனவே, பெரும்பாலானோர் ஊற வைத்தோ அல்லது அரைத்தோ பொடியாகவும் உண்கிறார்கள். ஆளி விதை பொடியை பூரி, சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது இந்த பொடியை தயிர், சாலட், கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்து பயன்படுத்தலாம்.
ஆளி விதையின் பக்க விளைவுகள்
ஆளி விதைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் பொழுது இரைப்பை பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும், மலச்சிக்கலையும் ஏற்படுத்திவிடும். நன்மைகளை அள்ளிக் கொடுத்தாலும் நார்ச்சத்து இதனுள் அதிகம் இருப்பதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பாக பச்சையான மற்றும் பழுக்காத ஆளி விதை உட்கொள்வதற்கு பாதுகாப்பற்றது என கருதப்படுகிறது.

ஆளி விதைகளில் ஈஸ்ட்ரோஜன் போன்ற விளைவுகளின் காரணமாக கர்ப்பகாலம் அல்லது பால் ஊட்டும் காலங்களில் அதனை எடுத்துக் கொள்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வது நல்லது. எந்த பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும் சுயமாக எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை உண்டு செய்யலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

