தந்தையின் நினைவுநாளை ஒட்டி, தனியார் பேருந்தில் இன்று ஒரு நாள் இலவசமாக பயணிக்கலாம் என்ற மகனின் அறிவிப்பால், பயணிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வேலவன் என்ற பெயரில் தனியார் பேருந்து சேவை தொழில் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தந்தையார் திரு.சுப்பிரமணியம் காலமானார்.
திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை ராஜ்குமார் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இவர்களுக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளில் பொதுமக்கள் இலவசமாக இன்று ஒரு நாள் மட்டும் பயணிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் கோவையில் இருந்து தாராபுரம் வரையிலும், தாராபுரத்தில் இருந்து கோவைக்கும் பொதுமக்கள் இன்று ஒரு நாள் இலவசமாக இந்த பேருந்தில் பயணிக்கின்றனர். மேலும் இன்று தங்களது பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!
நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து சேவையை மேற்கொள்ளும் வகையில் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் ஏறினால் அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்களது வேலவன் பேருந்தில் இலவசமாக ஆண்டுதோறும் பயணிக்கலாம் என ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் பேருந்து தொழில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், உதிரி பாகங்கள், வாகன பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இத்தொழிலை இயக்க முடியாத சூழல் உள்ளதை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

