தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வருபவர் ஆர் பார்த்திபன். இவர் சமீபத்தில், நடிகை திரிஷாவை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜயுடன் வந்தால் சர்ச்சை ஆன நிலையில், குந்தவையை வீட்டிலேயே குந்தவையுங்கள் என பார்த்திபன் அந்த வீடியோவில் பேசியிருந்ததற்கு த்ரிஷா பதிலடி கொடுத்திருந்தார்.

முன்னதாக , Ustaad Bhagat Singh என்ற தெலுங்கு படத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். அந்த படத்தின், பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசும் பொழுது பார்த்திபன் தனது ஜாதி பெயரை கூறி தெலுங்கில் பேசினார். தன் ஜாதி பெயரை குறிப்பிட்டு பார்த்திபன் இவ்வாறு பேசியதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த நிலையில், இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன் என பார்த்திபன் தெரிவித்து இருந்தார்.

NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!
முன்னதாக பார்த்திபன் கூறுகையில், என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் ஒருமுறை மனப்பூர்வமாக மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன் என எனக்கு கூறி மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆனால், பார்த்திபனே இந்த பிரச்சினையில் மன்னிப்பு கேட்டிருந்தாலும், யாரும் விடுவதாக இல்லை. இந்நிலையில், பார்த்திபனை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பார்த்திபன் இவ்வாறு சான்றிதழ் பெறுவதற்காக முயற்சிப்பதை குறிப்பிட்டு சான்றிதழ் வைத்திருந்தால் தான் மட்டும் போதாது அதை செயலில் காட்ட வேண்டும். ஜாதி பெருமை மற்றும் பெண்களை தவறாக பேசுவதும் பிறகு வருத்தம் மன்னிப்பு கேட்பதும் மக்களிடம் எடுபடாது என்று விளாசி உள்ளார் அவரது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

