காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து விவசாயிகள் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஜனநாயக திருவிழா நிகழ்வான தேர்தலில் பொதுமக்கள் 100 சதவிகிதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!
அதன்படி திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காய்கறிகளை அடுக்கி 100% வாக்களிப்போம் ஜனநாயக கடமை ஆற்றுவோம் என வார்த்தைகளை உருவாக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!
இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே துவக்கி வைத்தார் மேலும் உழவர் சந்தையில் இருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து 100% வாக்களிக்க வேண்டியது அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

