திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே தாய் மூகாம்பிகை நகரில், முறையான அனுமதியின்றி சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணன், தனி வட்டாட்சியர் குடிமைப்பொருள் (வடக்கு) ராகவி தலைமையிலான அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!
ஆய்வில் முறையான அனுமதியின்றி 200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் வீட்டு சிலிண்டர்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மேற்கண்ட சிலிண்டர்கள் விநாயகா கேஸ் ஏஜென்சிக்கு மேலும் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!
அதனைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை பறிமுதல் செய்து ஏஜன்சியின் உரிமையாளர் மோகன் என்பவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் சிலிண்டர்களை பதுக்கி வைத்து இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

