சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று விஜய் திரிஷா மற்றொன்று, ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து விவகாரம். ஆர்த்தி ரவி மோகனை 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில், சட்டப்படி விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆர்த்தியுடன் தான் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜோடியாக வந்ததிலிருந்து சர்ச்சைகள் பல வெடிக்க ஆரம்பித்தது.

இரண்டு பேரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு தற்போது ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். அதனால் ரவி மோகன் மற்றும் கெனிஷா வெளியிடும் பதிவுகளுக்கு இணையதளத்தில் கடும் கண்டனங்களும் தாறுமாறான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.

7 நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் வேட்டையில் ‘யூத்’.. OTT ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க..
இப்படி இருக்கும் நிலையில் ரவிமோகன் கோவாவில் வாங்கி ரூபாய் 42 லட்சம் மதிப்பிலான சொத்து பத்திரத்தில் திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ஆரத்தி, ரவி மோகன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் பொழுது சட்ட ரீதியாக தன்னை திருமணம் ஆகாதவர் என்று ரவிமோகன் குறிப்பிட முடியாது என்பதால், இது பெரும் பேசுபவர்களாக மாறி உள்ளது.

இது மட்டுமல்லாமல் ரவி மோகன் இவ்வாறு செய்திருப்பது தவறு என்றும், ஆரத்தியுடன் தான் வாழப் பிடிக்கவில்லை என்றால், தனது மகன்களை கூடவா கொஞ்சம் கூட இவர் நினைத்து பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், சிலர் இது தவறுதலாக கூட நடந்து இருக்கலாம் என்றும், ரவி மோகனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

