பொள்ளாச்சியை அடுத்த பாலக்காடு ரோடு அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி 79 அவரது மகன் நமச்சிவாயம் விசாலாட்சி அன்பு நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த மாதம் 20/02/26 செல்போனில் பல முறை தொடர்பு கொண்ட போதும் போன் எடுக்காததால் தனது அம்மாவை பார்க்கச் சென்ற போது கட்டிலில் சுய நினைவில்லாமல் கிடப்பதும் அம்மா விசாலாட்சி அணிந்திருந்த 8 அரை பவன் நகை காணாமல் போனது தெரியவந்தது.
மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!
விசாலாட்சியை தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக மரணத்தை உறுதி செய்தனர். இதை அடுத்து நமச்சிவாயம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து.
மூன்று தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். நகைக்காக நடந்த கொலை செய்யும் குற்றவாளிகள் குறித்தும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். அதே பகுதியைச் சார்ந்த நட்பாக பழகி வரும் சரோஜா விசாலாட்சி இறந்த அன்று வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது இதை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையிடம் சரோஜா நகைக்காக நட்பாக பழகியவரையே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!
சரோஜாவின் கணவர் முன்னாள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் சந்தேகம் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சரோஜா வை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். நகைக்காக நட்பாக பழகி தோழியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

