கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மூன்றாம் தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியான பிரேம் ஆனந்த் 60% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த திலீபன் (37), சூலூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
சூலூர் ஸ்ரீ சின்னையன் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பு எஸ்தர் (37) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக பிரேமானந்த் (54) என்பவருடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பிரேமானந்தை விட்டு எஸ்தர் பிரிந்து வாழ்ந்த நிலையில், அவருக்கும் திலீபனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!
கடந்த மூன்றாம் தேதி அதிகாலை சுமார் 5:50 மணியளவில், எஸ்தரின் வீட்டிற்கு திலீபன் வந்திருந்தபோது அங்கு வந்த பிரேமானந்த், இருவரும் தனிமையில் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்து, தான் வைத்திருந்த கத்தியால் திலீபனை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தினார். இதில் திலீபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற எஸ்தருக்கும் இடுப்பு பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது.
கொலைக்குப் பிறகு, பிரேமானந்த் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்துவிட்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.இதில் ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கு 60% உடல் தீக்காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து வந்த சூலூர் காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று எஸ்தர் மற்றும் பிரேமானந்த் ஆகிய இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விறகு உடைக்க மரத்தில் ஏறச் சொன்ன பள்ளி நிர்வாகம்.. இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் மாணவர்..!
அங்கு 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரேமானந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்னை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமான கொலையாளியும் இறந்துவிட்டதால் இது குறித்து காவல்துறையினர் மேற்படி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

