90 மற்றும் 2000ங்களில் இளைஞர்களின் நாடித்துடிப்பாக, கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. விஜயலட்சுமி என்ற பெயர் கொண்டு சினிமாவில் நுழைந்த ரம்பாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது தென்னிந்திய சினிமாத்துறை.
கவர்ச்சி, குணச்சித்திர வேடம், நடிப்பு, நடனம் என அனைத்திலும் கைதேர்ந்த வித்தகியான நடிகை ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து தரப்பு நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.

1993ல் உழவன் திரைப்படத்தில் அறிமுகமான அவர், கடைசியாக பெண் சிங்கம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன அவருக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தது குறிப்படத்தக்கது.

தொடை அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சின்னத்திரையில் அவ்வப்போது தலை காட்டி வந்தார். விரைவில் வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் அவர், உடற் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் பயங்கர ஸ்லிம் ஆகியுள்ளார்.

புதிய கதைகளை கேட்டு தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள ரம்பாவுக்கு தற்போது 49 வயதாகிறது. மீண்டும் திரையில் ரம்பாவை காண ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் ‘யூத்’.. சிறிய படமாக வந்து பெரிய சாதனை..!
இந்நிலையில், பிரபல நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் நடிகர் முரளியை அடித்தது குறித்து ரம்பா பகிர்ந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, தேசிய கீதம் படத்தில் முரளியுடன் ரம்பா இணைந்து நடிக்கும் பொழுது ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரம்பா தயாராகும்போது ரம்பா தலையில் ஏதோ தூசு இருந்ததை நடிகர் முரளி தட்டி விட முயற்சித்துள்ளார்.

பெத்தவங்க கண்ணு முன்னாடியே.. பாலியல் சீண்டல் குறித்து கும்பமேளா மோனாலிசா பகீர்..!
அதனை கண்ணாடியில் பார்த்த ரம்பா பல்லியை போட்டு தன்னை முரளி பயமுறுத்த முயற்சிகளாக தவறாக புரிந்து கொண்டு பயத்தில் அடித்து விட்டாராம். பின்னர், புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டாராம். முரளியும் அந்த விஷயத்தை பெருந்தன்மையாக எடுத்து கொண்டார் என அந்த நிகழ்வு குறித்து ரம்பா தெரிவித்துள்ளார்.

