2024 ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்த்து இணையதளத்தில் டிரெண்டிங்கில் இருந்தவர் மோனலிசா. தற்போது, நடிகையாக வலம் வருகிறார். இவரை முதன் முதலில் படத்தில், கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்து இருந்தார்.

ஆனால், துணை நடிகை ஒருவர் தன்னிடம் அவர் தவறான முறையில் நடந்து கொண்டார் என அளித்த புகாரை, அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். தனது முதல் பட இயக்குனர் சிறைக்கு சென்று விட்டார் என்பது மோனலிசா திரை வாழ்க்கை என்ன ஆகும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்த நிலையில், அதற்குள் அவருக்கு இன்னும் சில படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் ‘யூத்’.. சிறிய படமாக வந்து பெரிய சாதனை..!
மோனலிசா நடித்த ஆல்பம் பாடல் கூட சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மோனலிசா பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து கண்கலங்கி கோபமாக பேசியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, நான் முதன்முதலில் நடிக்க கமிட் ஆனது சனோஜ் மிஸ்ரா படத்தில் தான் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது சனோஜ் மிஸ்ரா என்னிடத்தில் தவறாக நடந்து கொண்டார். அவர் எனது உடல் பாகங்களை தொட்டு அத்து மீறினார்.
ரஜினியால் அழிந்தேன்.. என் வாழ்க்கை தலைகீழாக மாறியது மனம் திறந்த பிரபல நடிகை..!

அப்போது, எனது குடும்பத்தினர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அவர்களின் கண்முன்னே அவர் அப்படி மோசமாக நடந்து கொண்டார். இது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு முதல் படம் என்றால், அப்படித்தான் இருக்கும் என சகஜமாக பதில் தெரிவித்தார். முதல் படம் என்றால் என்ன வேண்டுமானாலும், செய்வீர்களா தவறான முறையில் நடப்பீர்களா? என கோபமாக கண்கலங்கி அழுது கொண்டே பேசிய நடிகை மோனாலிசாவின் பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

