கோவையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் திருநங்கைகளின் அட்டகாசம்! குறிப்பாக புதியதாக திறக்க படும் கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டல் விடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மான்செஸ்டர் என்றழைக்கபடும் கோவை மாநகரில் பல்வேறு தொழில் துறையினர் தங்களது கிளைகளை துவங்குவது, புதிய புதிய அங்காடிகள் திறப்பது என நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இதனை குறிவைத்து திருநங்கைகள் வலம் வருவது எோவையின் பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
குப்ப்பாக புதியதாக திறக்க படும் கடைகளுக்கு முன்னர் குழுவாக சேர்ந்து கொள்ள கின்றனர் பின்னர், கடை திறந்த உடனே சிறப்பு விருந்தினர்கள் இருக்கும் போதே வந்து பணம் கேட்டு மிரட்டல் விடுகின்றனர். இதனால் அந்த சமயத்தில் செய்வதறியாது பணத்தை இழந்து விடுகின்றனர் கடை உரிமையாளர்கள்.
பேரூர் தேர் திருவிழாவில் திடீர் சிக்கல்?.. 120 ஆண்டு பழமையான தேரை ஆய்வு செய்த அதிகாரிகள்..!
இதே போல இன்று கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஷிங்க் எனும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எதிர்பார்த்து காத்திருந்த திருநங்கைகள் ரிப்பன் வெட்டிய அடுத்த நொடி, அத்துமீறி கடைகளுக்குள் நுழைந்து கடையின் உரிமையாளர் யார் என கேட்டு உடனடியாக அவரிடம் நாங்கள் 10 பேர் வந்துள்ளோம் எங்களுக்கு நபர் ஒருவருக்கு ஐந்தாயிரம் விதம் 10 பேருக்கு 50,000 தர வேண்டும் அவ்வாறு கொடுத்தால் தான் கடை நன்றாக ஓடும் இல்லை என்றால் நாங்கள் சாபம் விட்டு விடுவோம் என்று மிரட்டினர்.
ஆடு அறுத்த கூலியைக் கூட பறிமுதல் செய்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு வணிகர்கள் கடும் எச்சரிக்கை..!
இதனால் செய்வதறியாது திகைத்து போன கடை உரிமையாளர் தன்னிடம் இருந்த 501 ரூபாயை எடுத்து, அவர்களிடம் வழங்கி, பிறகு வாருங்கள் உங்களுக்கு நான் தருகிறேன் என்று தெரிவித்தார் ஆனாலும் 501 ரூபாயை நாங்கள் உன்னிடம் பிச்சை கேட்டு வரவில்லை எதற்கு இந்த 501ரூபாய் இதனை நீயே வைத்துக்கொள் என்று திருப்பி அவரிடம் கொடுத்தனர்.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டார் அவரது, முன்னிலையில் திருநங்கைகள் இவ்வாறு செய்தது அனைவரையும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது. பின்னர் ஒரு வழியாக அவர்களுக்கு தலைக்கு ஆயிரம் விதம் பத்தாயிரம் கடன் உரிமையாளர் வழங்கியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது ஒரு கடை திறப்பு விழாவின் நெகிழ்ச்சியான சம்பவத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்தது. திருநங்கைகள் சென்றபின் அனைவரும் செய்வதறியாது சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் நாளுக்கு நாள் இவ்வாறான செயல்கள் திருநங்கைகளால் அதிகரித்து வருகின்றது எனவே மாநகர் பகுதிகளில் இவ்வாறான செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமா காவல்துறை காத்திருந்து பார்ப்போம்.

