கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திருவாருரில் வருகிற மே மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ள 43-வது மாநில மாநாடில் கோவை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்க வைப்பது மற்றும் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கும் கார்பேர்ட் கம்பெனிகள் ஆன்லைனில் வணிகம் செய்வதை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கல் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா,திருவாரூர் மாநாட்டிற்கு லட்சக்கணக்கானோரை திரட்டக் கூடிய பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும் இந்த மாநாடு வரலாறு திரும்பி பார்க்க கூடிய மாநாடு என்றும் குறிப்பிட்டார்.
‘நமது வாக்கு நமது உரிமை’- மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்..!
சமானிய வணிகர்களை பாதுகாக்க அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறியதுடன், இன்று காலை ஆடு அறுத்த கூலியை பெற்று சென்ற சாமானிய வணிகரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் சூழ்ந்து மறியல் செய்து திருப்பி வாங்கியிருக்கிறார்கள் எனவும் பறக்கும் படை அதிகாரிகள் காய்கறி பழக்கடைகளை முன்பு நின்று கொண்டு வணிகர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.
நள்ளிரவில் நில ஆக்கிரமிப்பு.. குச்சிகளை நட்டு இடத்தை பிடித்த பொதுமக்கள் – பின்னணி என்ன?..
மதுபான கடைகள் முன்பு நின்று கொண்டு மது கொடுத்து வருகிறாயா என காவல்துறை கேட்பது போல பறக்கும் படையினர் வணிகர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவ்ட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இதே நிலை தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர வேண்டும் என்றும் சிறிய அளவில் உணவகங்கள் நடத்தும் வணிகர்களை கண்டறிந்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர்,தங்களது கோரிக்களை நிறைவேற்றும் அரசியல் கட்சியினருக்கே எங்களது ஆதரவு என்றும் குறிப்பிட்டார்.

