தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களுக்கான நேர்காணலை பல கட்டங்களாக நடத்தி வருகிறார். தவெகவை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், ஆதாவ் அர்ச்சுனா, ஜே சி டி பிரபாகர் முக்கிய தலைவர்கள் எல்லாம் சென்னையில் களமிறங்க விருக்கிறார்களாம். விஜயை பொருத்தவரை பெரம்பூர் தொகுதி அவருக்கு விருப்பமானதாக மாறியிருக்கிறது.

அங்கே இருக்கும் விஜயின் ரசிகர்கள் ஓட்டை தாண்டி கட்சியின் கட்டமைப்பும் அங்கே பலமாக இருப்பதால், அவர் பெரம்பூரில் களமிறங்க முடிவு எடுத்திருப்பதாகவும், அதனை சிலர் மகிழ்ச்சியாக பார்த்தாலும், சிலர் வருத்தமாகவே கருதுகின்றனர். ஏற்கனவே, பெரம்பூர் என்றாலே திமுகவின் கோட்டை என்ற நிலைமை இருக்கிறது.
சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!
இப்படி ஹை ரிஸ்க்கான தொகுதியில் முதல் தேர்தலிலே போட்டியிட வேண்டுமா? திருச்சி பக்கம் நின்றால் உறுதியாக வெற்றி கிடைத்துவிடும் என புலம்பினாலும், இத்தனை சவால்களை தாண்டி தங்கள் தலைவரை வெல்ல வைத்து விட வேண்டும் என பெரம்பூர் தவெகவினர் இப்போது பரபரக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்கள் மட்டும் இன்றி விஜய்யும் தன் பங்குக்கு களத்தில் குதித்துள்ளார். அதாவது, உடனடியாக பல கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்க போகிறார். வெளியூரை சேர்ந்த விஜய் எப்படி பெரம்பூருக்கு நல்லது செய்வார் என்ற பிம்பத்தையும், பேச்சையும் உடைத்து என்னை பாருங்கள் நான் உங்களில் ஒருவன்.
குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. விஜய் – சங்கீதா விவகாரத்திற்கு நடுவே த்ரிஷாவின் பதிவு..!
உங்களுடனே இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக இந்த வீட்டை வாங்க அவர் முடிவு செய்திருப்பதாகவும், அரசியல் தளத்தில் பேச்சுக்கள் பேசப்படுகிறது. இந்த தகவலை ரமேஷ் பாலா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
. @TVKVijayHQ is planning to buy a house in #Perambur , where he is going to contest to avoid the outsider tag..#2026TNELECTIONS
— Ramesh Bala (@rameshlaus) March 24, 2026

