சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என அவரது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தான் ஆர்.ஜே பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில், இந்த கதை விஜய்க்கு முதலில் எழுதப்பட்டது. அவரிடம் கதை குறித்து தெரிவித்த விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது 2023 ல் இந்த கதையை எழுத தொடங்கினேன். ஐடியா பெரிது என்பதால், ஒரு பெரிய ஸ்டார் இந்த கதைக்கு தேவைப்பட்டது.

விஜய் சாருக்கு இந்த கதையை நான் சொன்னபோது உடனே சூட்டிங் தொடங்க முடியுமா? என கேட்டார். என் ஸ்டைலில் ஒரு படம் வேண்டும் எனவும் கேட்டார். எனக்கு இன்னும் நேரம் வேண்டும் என கேட்டேன். அதன் பின்னர், அவர் அரசியலுக்கு சென்று விட்டார். அவருடன் கதை பற்றி பேசும்போது, தான் ஸ்கிரிப்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் சூர்யாவுக்கு அந்த கதையை சொன்னேன் என ஆர்.ஜே பாலாஜி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

