நடிகர் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததோடு, கணவருக்கு வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டனர்.
அந்த சூழலில், தயாரிப்பாளர் வீட்டு திருமணத்திற்கு த்ரிஷாவுடன் மேட்ச் ஆடை அணிந்து கொண்டு ஜோடியாக விஜய் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள். இதற்கெல்லாம், எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓப்பனாகவே தவெக தொண்டர்கள் அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் இதற்கு எதிராக வலுத்தன. மற்றவர்களும் இது அவர்களது பர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக் கொண்டார்கள்.

இந்நிலையில், சிவகுமாரின் கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி, வீட்டு சாப்பாடு என்பது நிரந்தரம். ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால், ஓட்டலில் சாப்பிடலாமே தவிர்த்து மூன்று வேலையும் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்து விடும். எப்போதுமே வீடு மனைவி குழந்தைகள் தான் முதலில் ஹோட்டல் எல்லாம் அப்புறம் தான் என்றார்.

இந்நிலையில், சிவகுமாரின் இந்த கருத்தை சிலர் சங்கீதாவை விட்டு த்ரிஷா பின்னால் விஜய் சுற்றுவதை தான் சிவகுமார் ஹோட்டல் சாப்பாடு உடன் ஒப்பிட்டு இப்படி பேசியிருக்கிறார் என்றும், விஜயை இப்படி அட்டாக் செய்து விட்டார் என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். அதே சமயம், தனது மருமகளே நடிகையாக இருக்கும் பொழுது இப்படி கீழ்த்தரமாக பேசியிருக்க வேண்டாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

