தமிழக வெற்றிக்கழகத்தின் போராட்டத்தில் கலந்துகொண்ட அக்காட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா MGR க்கு பின் ஒரு பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து வந்ததால், அவர் அரசியலுக்கு வராமல் நடிக்கவே சென்று விட்டார் என்று கூறியிருந்தார்.

இதனிடையே, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை பலரும் கண்டித்த நிலையில் ரஜினிகாந்த்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறியிருந்த ரஜினி ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த் கமலும், ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. அனைவரும் அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறோம் என்றார்.

செய்தியாளர் ரஜினியின் இத்தனை ஆண்டுகால சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில், அளித்த அவர் கடவுளின் கருணையும், மக்களின் அன்பும் அவரின் கடுமையான உழைப்பும் இவை எல்லாம் தான் அவற்றை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி எழுப்பியதற்கு, தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என சொல்லிவிட்டார் என்பதால் இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

